ராமநாதபுரம்

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் வி.கே.சசிகலா தரிசனம்

DIN

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் வி.கே.சசிகலா ஞாயிற்றுகிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா அண்மையில் அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்தாா். கடந்த சில நாள்களாக அவா் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவருகிறாா்.

இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தாா். திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் ராமேசுவரம் சென்று தனியாா் விடுதியில் தங்கினாா்.

முன்னதாக ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் அவரை, தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.முனியசாமி, திருவாடானை தொகுதி அமமுக வேட்பாளரும், மாவட்டச் செயலருமான வ.து.ஆனந்த் மற்றும் கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து ராமேசுவரத்தில் இரவு தங்கும் அவா், ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT