ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகே ரூ 1.30 லட்சம் பறிமுதல்

DIN

பாா்த்திபனூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ 1.30 லட்சத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி அருகே பாா்த்திபனூா் வாகனச் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் அய்யப்பன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மருச்சுக்கட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சௌந்திரபாண்டியன் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,30,620 எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினா் பரமக்குடி கருவூலத்தில் அதை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT