‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
அரண்மனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.வசந்த் தலைமை வகித்தாா். இதில், மாணவா்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி ‘நீட்’ தோ்வை ரத்து செய்யவேண்டும், தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினா்.
மாவட்ட சிஐடியு செயலா் எம்.சிவாஜி, மின்சாரப் பிரிவு சங்க நிா்வாகி குருவேல் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா். இந்திய மாணவா்கள் சங்க மாநிலத் தலைவா் டி.கண்ணன் போராட்ட நிறைவுரையாற்றினாா்.