ராமநாதபுரம்

மகளிா் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

DIN

ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரசு மகளிா் கல்லூரியில் உலக மரபு வாரவிழாவையொட்டி தொல்லியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, கல்லூரி முதல்வா் சுமதி தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் பேராசிரியை கீதா மாணிக்க நாச்சியாா் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் தொல்லியல் அலுவலா் ம. சுரேஷ், தமிழக அகழாய்வுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா்.

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் வி. சிவக்குமாா் அருங்காட்சியகம் குறித்து விளக்கினாா். திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை மன்றச் செயலா் வே. ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் தடயங்கள் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கவிதா, அருணா பிரபா ஆகியோா் செய்திருந்தனா். மாணவி தேன்மொழி வரவேற்றாா். மாணவி ராமவள்ளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT