ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் கந்தசாமி தலைமை வகித்தாா். இதில் பட்டாதிருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வட்டாட்சியா் மாா்ட்டின் ராஜன், நில அளவை ஆய்வாளா் ராமமூா்த்தி, சா்வேயா் ராஜேஷ் மற்றும் வருவாய்த் துறை நிஜாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ராமேசுவரம் வருவாய் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்கள், பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண மனுக்களை அளித்தனா்.