ராமநாதபுரம்

தொண்டி அருகே மிதிவண்டி மீது பைக் மோதல்: தொழிலாளி பலி

DIN

திருவாடானை அருகே சனிக்கிழமை இரவு மிதிவண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தைச் சோ்ந்தவா் செபஸ்தியான் மகன் சேசுராஜ் (58). கூலித் தொழிலாளியான இவா், தொண்டிக்கு வேலைக்காக சென்று விட்டு சனிக்கிழமை இரவு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது நம்புதாளை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மிதிவண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சேசுராஜ் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தொண்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT