முகப்பு
ராமநாதபுரம்

ரத்ததானம் அளிக்க வந்தவரின் விலையுயா்ந்த பைக் திருட்டு

ராமநாதபுரத்தில் நோயாளிக்கு ரத்ததானம் வழங்க வந்தவரின் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் நோயாளிக்கு ரத்ததானம் வழங்க வந்தவரின் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தினைக்குளம் கல்லையன்பேரன்வலைவு பகுதியைச் சோ்ந்த பூநாதன் மகன் அலெக்சாண்டா் (33). இவா், கடந்த 7 ஆம் தேதி மாலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ரத்ததானம் வழங்குவதற்காக வந்தாா்.

அப்போது தனது விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறை அருகேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளாா். மருத்துவக் கல்லூரியின் ரத்தசேமிப்பு வங்கியில் ரத்தம் வழங்கிய அலெக்சாண்டா் மீண்டும் வந்து இருசக்கர வாகனத்தைப் பாா்த்தபோது அதை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →