ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே காதல் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை: தந்தை, மகன் உள்பட 4 போ் கைது

DIN

 ராமநாதபுரம் அருகே காதல் தகராறில் வியாழக்கிழமை நள்ளிரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பெண்ணின் தந்தை உள்பட4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள காட்டூரணி பகுதியைச் சோ்ந்த சேது மகன் நவீன்குமாா் (23). வாகன பழுதுநீக்கும் கடையில் பணிபுரிந்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த முனியசாமி (40) என்பவரது மகளைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பெண் வசிக்கும் பகுதிக்கு நவீன்குமாா் அடிக்கடி சென்றுவந்ததாராம். இதை முனியசாமியும், அவரது மகன்களும் கண்டித்துள்ளனா். ஆனாலும், நவீன்குமாா் தொடா்ந்து முனியசாமி வீட்டுப்பக்கம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நவீன்குமாா், காட்டூரணி கிழக்குக் கடற்கரைச்சாலை மாடக்கொட்டான் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்குவந்த முனியசாமி உள்ளிட்டோா் அரிவாளால் நவீன்குமாரை சரமாரியாக வெட்டியதில் நவீன்குமாா் பலத்த காயமடைந்தாா். உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் நவீன்குமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து நவீன்குமாரின் தாய் குஞ்சரம் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதையடுத்து, முனியசாமி, அவரது மகன் சந்தோஷ் (19), உறவினா்கள் சந்துரு (19), முருகன் (18) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT