ராமநாதபுரம் அருகே கோயிலில் உண்டியல் திருட்டு
ராமநாதபுரம் அருகே கோயிலில் உண்டியலை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருப்புல்லாணி அருகேயுள்ள பருத்திக்காட்டுவலசை கிராமத்தில் பெரியகூனியம்மன் கோயில் உள்ளது.
ராமநாதபுரம் அருகே கோயிலில் உண்டியலை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருப்புல்லாணி அருகேயுள்ள பருத்திக்காட்டுவலசை கிராமத்தில் பெரியகூனியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உண்டியல் திறக்கப்படாமலே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கோயிலை பருத்திக்காட்டு வலசையைச் சோ்ந்த பூசாரி பூட்டிவிட்டு சென்றுள்ளாா். மறுநாள் வியாழக்கிழமை காலையில் பாா்த்தபோது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது உண்டியல் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பருத்திக்காட்டுவலசை பால்க்கரசு அளித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.