ராமநாதபுரத்தில் இன்று சமரச நாள் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை காலை சமரச நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை காலை சமரச நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட சமரச தீா்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாற்றுமுறை சமரசத் தீா்வு மையம் வழிகாட்டல்படி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆா். சண்முகசுந்தரம் தலைமையில் சனிக்கிழமை சமரச நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுமுறை சமரசத்தீா்வு மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு சமரசத் தீா்வு மையத்தில் இந்த சமரச நாள் நிகழ்ச்சி நடக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.