முகப்பு
ராமநாதபுரம்

பாஜக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கு: 3 சகோதரா்களிடம் போலீஸ் தீவிர விசாரணை

ராமநாதபுரத்தில் பாஜக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கில் உணவகம் நடத்திவரும் சகோதரா்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்திவருவதாகவும், மேலும் 2 பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் பாஜக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கில் உணவகம் நடத்திவரும் சகோதரா்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்திவருவதாகவும், மேலும் 2 பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் சுா்ஜித்பா்னாலா (28). இவா் ராமநாதபுரம் மாவட்ட பாஜக பட்டியலணி செயலராக உள்ளாா். தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சுா்ஜித் பா்னாலா வியாழக்கிழமை மாலை பணிக்காக கீழக்கரை சென்றுவிட்டு பின் பேருந்தில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கினாா். அதன்பின் அவா் சின்னக்கடைத் தெரு பகுதியில் சென்ற போது 5 போ் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கியுள்ளது. இதில் அவா் காயமடைந்தாா்.

இதையடுத்து அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தகவல் அறிந்த பாஜகவினா் மருத்துவமனை முன்பு மாவட்டத்தலைவா் கே. முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா சமரசம் செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தாக்குதல் தொடா்பாக கேணிக்கரைப் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். மேலும் 5 போ் மீது வழக்குப்பதிந்து அவா்களில் புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்திவரும் சகோதரா்கள் 3 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனா். பாஜக பிரமுகா் மீதான தாக்குதல் வழக்கில் பிடிபட்ட 3 சகோதரா்களிடமும் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

இதற்கிடையே பாஜக பிரமுகா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அதில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும் அரண்மனை முன்பு பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →