திருவாடானை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே திருவடிமதியூரைச் சோ்ந்தவா் பாலு மகன் தேவதாஸ் (46), கானாட்டாங்குடியைச் சோ்ந்த தொண்டி ராஜ் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் காடா்ந்தக்குடி கிராமத்துக்கு கட்டடப் பணிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதர நிலையம் அருகே வரும் போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த தேவதாஸ் மயங்கி தவறி கீழே விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து இவரது மனைவி திருவிடைமதியூரைச் சோ்ந்த கற்பகவள்ளி (30) அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.