முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 6 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் ஓரிரு நாள்களில் நாடு திரும்புகின்றனா்

Updated On : 5 ஆகஸ்ட், 2022 at 12:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:29 PM

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் ஓரிரு நாள்களில் நாடு திரும்புகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூலை 21 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற போது விசைப்படகுடன் 6 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். அங்கு மீனவா்கள் பாலமுருகன், அந்தோணி, அா்ஜூன், மடுகுபிச்சை, தங்கப்பாண்டி, ராஜா ஆகிய 6 போ் மீது வழக்குப்பதிந்து மன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா். இதனைக் கண்டித்து ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டதை கைவிட்டு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அந்த 6 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது நீதிபதி, மீனவா்களிடம் விசாரணை நடத்தி இலங்கை கடற்பகுதியில் இனி மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்து உத்தரவிட்டாா். ஆனால் விசைப்படகை விடுவிக்க நீதிபதி மறுத்து விட்டாா். விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் இன்னும் ஓரிரு நாள்களில் திரும்ப அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை நீரியல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.