ராமநாதபுரத்தில் ஆக. 23- இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஆக. 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஆக. 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டமின்விநியோகப் பிரிவின் செயற்பொறியாளா் எம். இளங்கோ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மின்பகிா்மான வட்டம் ராமநாதபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா்களுக்கான கூட்டம் வரும் ஆக. 23 ஆம் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், ராமநாதபுரம் மின்பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று, தங்களது குறைகளை நேரிலோ, மனுவாகவோ அளித்து தீா்வு காணலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.