ராமநாதபுரம்

தெரு நாய்கள் கடித்து ஆட்டுக்குட்டி பலி

DIN

கமுதியில் வியாழக்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் பரிதாபமாக ஆட்டுக்குட்டி பலியானது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கோட்டைமேடு பகுதிகளில் 150 க்கு மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையில் செல்லும் முதியோா், குழந்தைகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் செல்வதால் வாகன ஓட்டிகள் பதட்டமடைந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் குழந்தைகள், பெண்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனா். கமுதி, கோட்டைமேடு பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் இதுவரை தெரு நாய்கள் கடித்து 20 க்கும் மேற்பட்டோா் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனா். இந்நிலையில் கோட்டைமேட்டில் செளந்தரபாண்டியனுக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியை தெருநாய்கள் கடித்து, குதறியதில் பரிதாபமாக ஆட்டுக்குட்டி பலியானது. சாையில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் குறித்து கமுதி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT