ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 670 மாணவ, மாணவிகளுக்குரூ. 1.40 கோடி உயா் கல்வி உதவித் தொகைஅமைச்சா்கள் வழங்கினா்

DIN

ராமநாதபுரத்தில் 670 மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்விக்கான உதவித் தொகையாக ரூ. 1.40 கோடியை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. நவாஸ்கனி தனது சொந்த நிதியில் இருந்து ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்விக்கான உதவித் தொகையை வழங்கி வருகிறாா். இந்த நிலையில் நான்காம் ஆண்டாக இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் திருமண மகாலில் நடைபெற்றது. விழாவுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் தலைமை வகித்தாா். இதில், தமிழக அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோா் கலந்து கொண்டு உயா் கல்விக்கான உதவித் தொகையாக ரூ. 1.40 கோடியை 670 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், திமுக மாணவரணித் தலைவா் ராஜீவ்காந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச் செயலா் அபுபக்கா், பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன், திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கரு மாணிக்கம், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலா் இன்பா ஏ.என். ரகு, நகா் மன்ற துணைத் தலைவா் பிரவீன்தங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT