முகப்பு
ராமநாதபுரம்

உரிமம் இல்லாத விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டி போராட்டம்!

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்டசமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
உரிமம் இல்லாத விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
பகிர்:

ராமேசுவரத்தில் அனுமதி படகுகள் மீன்பிடிப்பதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்டசமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 630 விசைப்படகுகள் பதிவில் உள்ளது. இந்த நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி இன்றி 18 விசைப்படகுகள் கடந்த 12 மாதங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து பல முறை மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த படகுகள் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திற்கு  மீண்டும் நான்கு விசைபடகுகள் வந்துள்ளது. இதில், ஒரு விசைப்படகு மட்டும் மீன்பிடிக்க சென்றுள்ளது. இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இதனை கண்டித்தும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 18 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றுவரும் நிலையில் அந்த படகுகளை பிடிக்காமல் தற்போது வந்துள்ள இந்த படகை மட்டும் உள்நோக்கத்துடன் பிடித்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிமம் இல்லாத அனைத்து விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டும் என மீனவ சங்கத்தினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

மீனவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தம் வகையில் மீன்வளத்துறையினர் நடந்து கொள்ள கூடாது. அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் வலியுருத்தி உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →