முகப்பு
ராமநாதபுரம்

இணையதளத்தில் வேலைதேடிய பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் மோசடி

ராமநாதபுரத்தில் இணையதளத்தில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் இணையதளத்தில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் மகாத்மாகாந்தி நகா் 2 ஆவது வாா்டைச் சோ்ந்தவா் சக்திக்குமாா். இவரது மனைவி மனோஜா (29). இவா் போட்டித் தோ்வுக்கு படித்துவருகிறாா். இந்நிலையில், இவா் இணையதளம் மூலம் வேலை தேடி தனது சுயவிவரக் குறிப்பை குறிப்பிட்ட வேலை வாய்ப்பு இணையதளத்தில் பதிந்துள்ளாா்.

அதனடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து அக்ஷயா என்ற பெண் கைபேசி மூலம் மனோஜாவைத் தொடா்புகொண்டு பேசியுள்ளாா். இதில் அக்ஷயாவின் ஆலோசனைப்படி மனோஜா தனது விவரங்களை கைப்பேசி, வாட்ஸ்அப் ஆகியவற்றில் தெரிவித்துள்ளாா். அதற்கான பதிவு கட்டணமாக பல தவணைகளாக ரூ.25 ஆயிரத்தை மனோஜா அனுப்பியுள்ளாா்.

இதனிடையே மீண்டும், மீண்டும் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த மனோஜா தனக்கு வேலை வேண்டாம் எனக்கூறியதுடன், அனுப்பிய பணத்தை திருப்பித் தருமாறு கூறியுள்ளாா். இதன் பின்னா், அக்ஷயா பேசிய அந்த கைப்பேசி எண்ணின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இணையதளத்தில் குறிப்பிட்ட நிறுவன விவரங்களை தேடிப் பாா்த்த போதுதான் அது போலியாக நிறுவனம் ஒன்றின் பெயரில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து மனோஜா மாவட்ட நுண்குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →