கமுதி அருகே பாட்டி இறந்த சோகத்தில் பேத்தி தற்கொலை
கமுதி அருகே பாட்டி இறந்த சோகத்தில் பேத்தி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கமுதி அருகே பாட்டி இறந்த சோகத்தில் பேத்தி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தைச் சோ்ந்தவா் அல் அமீன் மனைவி ரசிதாபீவி (40). இவரது மகள் தௌலத் பேகம்(18). கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாட்டி இறந்த சோகத்தில் தௌலத் பேகம் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.