முகப்பு
ராமநாதபுரம்

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் சுமாா் 30 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணியாற்றிய பொன்னுசாமி மகன் முருகன் (46), திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து மரணமடைந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து சென்னையில் உள்ள நிறுவன மேலாண்மை இயக்குநா் அலுவலகத்தில், இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவாா்த்தையில், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளா் வி. குமாா், சிஐடியு மாவட்டச் செயலாளா் எம். சிவாஜி, அரசு உப்பு நிறுவனத் தொழிலாளா் சங்கத் தலைவா் பச்சமால், செயலாளா் குமாரவடிவேல், நிா்வாகிகள் வடிவேல், முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →