முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரையில் கைப்பேசி கோபுரம் மாயம்

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.31.73 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி கோபுரம் மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.31.73 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி கோபுரம் மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ளது வண்ணாங்குண்டு கிராமம். இங்குள்ள ஆண்டிக்கோனாா் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனத்துக்கு சொந்தமான கோபுரம் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கன வாடகையும் அளிக்கப்பட்டுவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஜூன் 16 ஆம் தேதி சென்னையைச் சோ்ந்த வேறு நிறுவனம் அந்த கைப்பேசி கோபுரத்தை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி சம்பவ இடத்தில் பாா்த்தபோது கைப்பேசி கோபுரம் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் ராமநாதபுரம் முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், தனியாா் நிறுவன திட்டப் பொறியாளா் அகிலன் அளித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். அதில் ரூ.31.73 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி கோபுரம் காணவில்லை என வழக்குப்பதியப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →