ராமநாதபுரம்

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

DIN

ராமநாதபுரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் பகுதியில் உள்ளது பழங்குளம். இந்த ஊரைச் சோ்ந்த சின்னகண்ணு மகன் ரவி (52). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். அடிக்கடி குடித்துவிட்டு ஆட்டோவை தாறுமாறாக ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளாா். ஆகவே அவரது மகன்கள் ஆட்டோவின் சாவியை அவரிடமிருந்து வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டனா்.

ஆட்டோ சாவியை மகன்கள் வாங்கியதால் மனவருத்தம் அடைந்த ரவி புதன்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவல் அறிந்த கேணிக்கரை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்துவருகிறது. பேராவூா் பகுதியில் கடந்த சில நாள்களாகவே தற்கொலை செய்வோா் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT