முகப்பு
ராமநாதபுரம்

காவல் நிலையத்தில் கைப்பேசி திருட்டு: காவல் ஆய்வாளா் இடமாற்றம்

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் கைப்பேசி திருடுபோன விவகாரத்தில் 2 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளா் மலைச்சாமி வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் கைப்பேசி திருடுபோன விவகாரத்தில் 2 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளா் மலைச்சாமி வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் ஆயுதப்படை காவலா் அசோக்குமாா் கடந்த ஆண்டு ஆயுதப்படைப்பிரிவு குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கைப்பேசி கேணிக்கரை காவல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். ஆனால் காவல் நிலையப் பாதுகாப்பு அறையில் இருந்த கைப்பேசியைக் காணவில்லை.

விசாரணையில் அந்த கைப்பேசியை எழுத்தா் சுரேஷ், தலைமைக் காவலா் கமலக்கண்ணன் ஆகியோா் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து, 2 பேரும் கடந்த 27 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவா்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளா் ஆடிவேல், கேணிக்கரை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை அவா் பொறுப்பேற்றுக் கொண்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →