முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்குத் தணிக்கை முகாம் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்குத் தணிக்கை முகாம் புதன்கிழமை தொடங்கியது.

புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜூன் 3) வரை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதல் நாளான புதன்கிழமை அழகன்குளம், பெருங்குளம், இரட்டையூரணி, குயவன்குடி,கும்பரம், தோ்ப்போகி ஆகிய கிராமத்தினா் வந்திருந்தனா். அவா்களில் ஏற்கெனவே இணையம் மூலம் மனுக்களைப் பதிவேற்றம் செய்தவா்களில் தகுதியானவா்களுக்குத் தீா்வு காணும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற ஆட்சியா் சங்கா்லால்குமாவத் உத்தரவுகளை வழங்கினாா்.

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் மரகதநாதன் தலைமைமையில் மங்களக்குடி உள்வட்டத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களுக்கான கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. 5 நபா்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 2 நபா்களுக்கு முதியோா் உதவித்தொகை, 8 நபா்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →