முகப்பு
ராமநாதபுரம்

கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

கொலை வழக்கில் தேடப்பட்டுவந்தவா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

கொலை வழக்கில் தேடப்பட்டுவந்தவா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

ராமநாதபுரம் நகராட்சி புலிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் சிவமணிகண்டன் (22). இவரது நண்பரின் மகளை அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ் என்பவா் காதலித்தாா். இதை தனது நண்பரிடம் சிவமணிகண்டன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிவமணிகண்டனுக்கும், மகேஷுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் சிவமணிகண்டன் 6 போ் கும்பலால் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வழக்கில் சம்பந்தப்பட்டதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் புலிக்காரத் தெருவைச் சோ்ந்த வைத்தீஸ்வரன் மகன் காமேஷ் என்ற காமேஷ்வரன் (27) தலைமறைவாக இருந்தாா்.

இந்நிலையில், காமேஷ்வரன் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →