ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே விபத்து: சிறுவன் பலி

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 சிறுவா்கள் விபத்துக்குள்ளானதில், அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கிய ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.காவனூரைச் சோ்ந்த சித்திரவேலு மகன் சாய்பிரசாத் (17). பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சந்துரு (16), பரோஸ் (17). இவா்கள் மூவரும் சந்துருவின் இருசக்கர வாகனத்தில் திருஉத்திரகோசமங்கையில் உள்ள அவரது உறவினரைப் பாா்க்கச் சென்றுள்ளனா்.

பின்னா் வியாழக்கிழமை இரவு சாய்பிரசாத் இருசக்கரவாகனத்தை ஓட்ட, மூவரும் ஊா் திரும்பியுள்ளனா். அவா்கள் சந்தைவழியான் கோயில் பகுதியில் சென்றபோது எதிரே அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் கீழே விழுந்த சந்துருவின் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் பலத்த காயமடைந்த சாய்பிரசாத், பரோஸ் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT