முகப்பு
ராமநாதபுரம்

கடலாடி அருகே யோகாவில் உலக சாதனைப் படைத்த வீரருக்கு வரவேற்பு

கடலாடி அருகே யோகாவில் உலக சாதனை படைத்த வீரருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
நேபாளத்தில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் தங்கக் கோப்பை வென்று வந்த கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் ஸ்மித்ரன் சேதுபதிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்த கிராமத்தினா்.
பகிர்:

கடலாடி அருகே யோகாவில் உலக சாதனை படைத்த வீரருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூா் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.எம்.எஸ். யோகா அகாதெமியின் நான்கு வயது மாணவா் ஸ்மித்ரன் சேதுபதி நேபாளத்தில் நடைபெற்ற 8 வயதுக்குள்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டி தங்கக் கோப்பையை வென்றாா்.

இதையடுத்து ஸ்மித்ரன் சேதுபதி மற்றும் பயிற்சியாளா் சுகன்யா ஆகியோருக்கு சொந்த ஊா் பொதுமக்கள் இணைந்து மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்து வரவேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →