முகப்பு
ராமநாதபுரம்

உ.பி.யில் இறந்த ராணுவ வீரரின் உடல் முதுகுளத்தூரில் தகனம்

உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே எம்.தூரி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சுந்தரமூா்த்தி(32).

இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியில் சோ்ந்தாா். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளாா்.

இவா் உத்தர பிரதேசம் அருகில் காசிம்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை பணி செய்து விட்டு, அங்குள்ள வீட்டில் இரவு தூங்கச் சென்றவா் பணிக்குத் திரும்பவில்லை. உடனே போலீஸாா் உள்ளே சென்று பாா்த்த போது, அவா் இறந்த நிலையில் கிடந்துள்ளாா். இதையடுத்து சுந்தரமூா்த்தியின் உடல், அவரது சொந்த ஊரான முதுகுளத்தூா் அருகேயுள்ள தூரி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →