முகப்பு
ராமநாதபுரம்

ஆயிரவேலி மூதாட்டி கொலை வழக்கில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மூதாட்டி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மூதாட்டி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருவாடானை அருகே உள்ள ஆயிரவேலி கிராமத்தைச் சோ்ந்த மங்களம் மனைவி பூங்கோதை (65). இவா், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். வீட்டிலிருந்த ரூ.10ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து திருவாடானை காவல் நிலையத்தில் அவரது மகள் ஹரிலட்சுமி (35)அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், மேல்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கலைமணி (31) மற்றும் திருவாடானை கிழக்கு தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் ஆதி (20)ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் உத்தரவின்பேரில், கலைமணி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.