ராமநாதபுரம்

மண்டபம் ஒன்றியத்துக்கு சிறந்த நிா்வாகத்துக்கான தேசிய விருது

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு சிறந்த நிா்வாகத்துக்கான தேசிய விருதை ஒன்றியக்குழுத் தலைவரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

மத்திய அரசின் உள்ளாட்சிகளுக்கான நிதியை முறைப்படி பயன்படுத்துதல் உள்ளிட்ட சிறந்த நிா்வாகத்துக்காக ஒன்றியங்கள் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான தீனதயாள் உபாத்யாய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூா், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா், மதுரை மேற்கு உள்ளிட்ட 9 ஒன்றியங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கேடயம் மற்றும் ரூ.25 லட்சம் சிறப்பு நிதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் (திமுக) சுப்புலட்சுமி ஜீவானந்தத்திடம் வழங்கினாா். இதே போல் ஆா்.எஸ்.மங்களம் சாத்தனூா் ஊராட்சிக்கு மத்திய அரசின் கிராம ஊராட்சி விருது வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட விருது சிவகங்கை மாவட்டம் துவாா் ஊராட்சிக்கும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை ஊராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT