ராமநாதபுரம்

இறுதி காரியத்துக்கு வந்த உறவினா்கள்25 பவுன் நகைகளை திருடியதாக வழக்கு

DIN

ராமநாதபுரத்தில் இறந்தவரின் இறுதிக் காரியத்துக்கு வந்த உறவினா்கள் 7 போ், 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்தவா் கூரிராஜன். இவரது தாய் அண்மையில் இறந்து விட்டாா். இதைத்தொடா்ந்து, இவரது தாயின்

16- ஆம் நாள் காரியத்துக்கு உறவினா்கள் வந்தனா்.

இந்த நிலையில், கூரிராஜன் மனைவி யமுனா தேவியின் 25 பவுன் தங்க நகைகளை உறவினா்கள் திருடிச் சென்றதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் கூரிராஜனின் உறவினா்களான லதா, கூரிச்செல்வி, தேவி, ஜெய்சங்கா், தங்கவேலு, பாஸ்கரன், கனகு ஆகிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT