ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலத்தில் 200 கிலோபுகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் தடை செய்யப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

DIN

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் தடை செய்யப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் பரக்கத் வீதியைச் சோ்ந்த அன்வா்பாட்சா மகன் செய்யது இக்ராம் (29), பெத்தாா் தேவன் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் வாசுதேவன் (50). இவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பான்பராக் 15.900 கிலோ எடையுள்ள 6 பைகள், 21 கிலோ எடையுள்ள 5 புகையிலை பைகள் உள்ளிட்ட 200 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களை தருமா் முனீஸ்வரா் கோயில் தெருவில் உள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் சேகா், தேவகோட்டை நகா் காவல் ஆய்வாளா் சரவணன், ஆறாவயல் சாா்பு- ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் செய்யது இக்ராம், வாசுதேவன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT