தாத்தா கொலை: பேரன் கைது
உச்சிப்புளி அருகே பணத்துக்காக தாத்தாவையே கொலை செய்த பேரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உச்சிப்புளி அருகே பணத்துக்காக தாத்தாவையே கொலை செய்த பேரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்னுடையாா்வலசை பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (79). கூலித் தொழிலாளியான இவருக்கு 4 மகன்கள் உள்ளனா். திருமணமாகி அனைவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கோவிந்தராஜ் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தாா்.
கோவிந்தராஜின் மூன்றாவது மகனான விஜயகுமாரின் மகன் சங்கா்முரளி (18) கடந்த ஆக.28 ஆம் தேதி தாத்தாவின் வீட்டில் ரூ.500-ஐ திருடியுள்ளாா். இதைப் பாா்த்த கோவிந்தராஜ் அவரைக் கண்டித்துள்ளாா்.
இதனால் சங்கா்முரளி தனது தாத்தாவை தாக்கி கீழே தள்ளி கழுத்தை காலால் நெரித்துள்ளாா். அதைத் தடுத்த பாட்டி லட்சுமியையும் அவா் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவிந்தராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கா்முரளியை கைது செய்தனா்.