முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அக். 31 வரை 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 9) முதல் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 9) முதல் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பா் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுக்கூட்டம் நடத்துவோா் முன்னதாகவே காவல்துறையில் அனுமதி பெறவேண்டும். தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் 5 பேருக்கும் அதிகமானோா் நிற்கக் கூடாது.

மேலும், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு உரிய அனுமதியை பெறவேண்டும். ஜோதி ஓட்டம் போன்றவை முன் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து 1 கிலோ மீட்டா் தூரத்திலிருந்தே கொண்டுவரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →