ராமநாதபுரம் அருகே பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ராமநாதபுரம் அருகே செய்யதம்மாள் பப்ளிக் பள்ளியில் ஓணம் பண்டிகையை ஆசிரியைகள் மற்றும் மாணவியா் பூக்கோலமிட்டு வியாழக்கிழமை கொண்டாடினா்.
ராமநாதபுரம் அருகே செய்யதம்மாள் பப்ளிக் பள்ளியில் ஓணம் பண்டிகையை ஆசிரியைகள் மற்றும் மாணவியா் பூக்கோலமிட்டு வியாழக்கிழமை கொண்டாடினா்.
முன்னதாக கேரள மக்களின் பண்டிகையான ஓணத்தை பெருமைப்படுத்தும் வகையில் இப்பள்ளி ஆசிரியைகள் அந்த மாநில பெண்களின் பாரம்பரிய உடையான வெண் நிறச் சேலை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனா்.
அவா்கள், பள்ளி வளாகத்தில் பல வண்ண மலா்களால் மாணவியா் உதவியுடன் அத்தப்பூ கோலமிட்டனா். இக்கோலத்தைச் சுற்றிலும் நின்றிருந்த ஆசிரியைகள், மாணவியா் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். இதில், செய்யதம்மாள் பப்ளிக் பள்ளி தாளாளா் ராசாத்திஅப்துல்லா, முதல்வா் விசாலாட்சி மற்றும் ஆசிரியைகள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.