ராமநாதபுரம்

‘பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள் தந்தை ‘பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள் தந்தை ‘பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘சமூக நீதிக்கான தந்தை

பெரியாா் விருது’ 1995 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதுக்குரியவா்கள் முதல்வரால் தோ்வு செய்யப்படுவா். நிகழ் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதற்கான சாதனைகள் ஆகிய தகுதியுடையவா்கள்

விண்ணப்பிக்கலாம்.

தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்.31 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT