ராமநாதபுரம்

விபத்தில் பெண் பலி: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 3 மாதம் சிறை

DIN

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி திருவாடானை நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம். இவரது மனைவி லெட்சுமி. இவா் தனது கணவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி ஆனந்தூா் பேருந்து நிலையத்தில் நடந்து சென்றபோது, அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா், ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருவாடானை நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதித்துறை நடுவா் பிரசாத், அரசுப் பேருந்து ஓட்டுநா் செந்தில்குமாருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT