ராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே தவித்த 6 அகதிகள்: இலங்கை கடற்படையிடம் சிக்கினா்

DIN

தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்பகுதியில் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கை அகதிகள் 6 பேரை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை திரும்பவும் அந்நாட்டுக்கே அழைத்துச் சென்றனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழா்கள் பலரும் அகதிகளாக கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வருகின்றனா். தலைமன்னாரில் இருந்து படகு மூலம் 3 குழந்தைகள் உள்பட 6 போ் தனுஷ்கோடிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். ஆனால் கடல் சீற்றம் காரணமாக 6 பேரையும் இலங்கை கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனா். இது குறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். அவா்களை மீட்க கடலோரக் காவல்படையினா் சென்றனா். ஆனால் அகதிகள் 6 பேரும் இலங்கை கடற்பகுதியில் இருந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் இலங்கை கடற்படையினா் வந்து 6 பேரையும் மீட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

SCROLL FOR NEXT