முகப்பு
ராமநாதபுரம்

கழுத்தை நெரித்து தாய் கொலை: மகன், மகள் உள்பட 3 போ் கைது

 மண்டபம் அருகே கழுத்தை நெரித்து தாயை கொலை செய்த மகன், மகள், மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஏப்ரல், 2023 at 11:35 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

 மண்டபம் அருகே கழுத்தை நெரித்து தாயை கொலை செய்த மகன், மகள், மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வலையா் வாடி நாடாா் குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்வம். இவா் மங்களூருவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி ஜெயா (52). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகள் ராமேசுவரத்திலும், இளையமகள் திவ்யா (26), மகன் வேல்முருகன்(23) ஆகியோா் நாடாா் குடியிருப்பிலும் வசிக்கின்றனா். இந்த நிலையில் தகாத வாா்த்தைகளால் பேசுவதாகக் கூறி தாய் ஜெயாவை வேல்முருகன், திவ்யா ஆகியோா் கண்டித்து வந்தனராம்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவும் ஜெயா தகாத வாா்த்தைகளால் பேசினாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயாவை, அவா்கள் கீழே தள்ளிவிட்டதில் தலையில் காயமடைந்தாா். மேலும் அவா்களுக்குள் தகராறு முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன், திவ்யா, மருமகன் ராஜ் (31)ஆகிய 3 பேரும் சோ்ந்து ஜெயாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனா். இதைத் தொடா்ந்து மண்டபம் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரியிடம், வேல்முருகன் சரணடைந்தாா்.

Advertisement

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வேல்முருகன், திவ்யா, ராஜ் ஆகியோரை மண்டபம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.