முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
180 ரன்களுக்கு ஆட்டமிழந்த கொல்கத்தா!
அகமதாபாத் : அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் இன்று(ஏப். 17) இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 79 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணியால் சவாலான ஸ்கோரைப் பதிவு செய்ய முடிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
குஜராத் அணியில் முகமது சிராஜ் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணியின் ரன் ரேட்டைக் குறைத்தார். அவர் 4 ஒவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
Advertisement
அடுத்து, 181 ரன்கள் இலக்கை துரத்தும் குஜராத் அணி பவர் ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகிறது.