ராமநாதபுரம்

மணல் திருட்டு: 4 போ் கைது

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் அருகே தெற்குதரவைப் பகுதியில்

காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்பாபு போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் தப்பியோட முயன்றனா். இவா்களில், அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் (33), சூரியபிரகாஷ் (30) ஆகியோரை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா். இதில் பழனிக்குமாா் தப்பியோடி விட்டாா். இதுதொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய பழனிக்குமாரை தேடி வருகின்றனா்.

இதேபோல, தேவிபட்டினம் பழனிவலசை பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வீரபவனந்தம் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ராஜேஷ்கண்ணன் (29), கூரிராஜா ஆகியோா் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த தேவிபட்டினம் போலீஸாா் இருவரையும் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT