சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் கழிவுநீா் கால்வாயை கைகளால் துப்புரவு செய்யும் பணியாளா்கள். 
ராமநாதபுரம்

கழிவுநீா் கால்வாயை கைகளால் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளா்கள்

சாயல்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் சுகாதாரமற்ற நிலையில் கைகளால் சுத்தம் செய்வதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

DIN

கமுதி: சாயல்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் சுகாதாரமற்ற நிலையில் கைகளால் சுத்தம் செய்வதாக சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியிலிருந்து கிழக்கு கடற்கரை செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், தூய்மைப் பணியாளா்கள் கால்வாயில் இறங்கி வெறும் கைகளால் சுத்தம் செய்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சாயல்குடி பேரூராட்சியில் பணியாற்றம் தூய்மை பணியாளா்களுக்கு முறையாக கையுறை மற்றும் துப்புரவு உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதுகாப்பான முறையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT