ராமநாதபுரம்

வேன் மோதி இளைஞா் பலி

ராமேசுவரம் அருகே திங்கள்கிழமை இரவு சுற்றுலா வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

DIN


ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே திங்கள்கிழமை இரவு சுற்றுலா வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணம் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் மகன் மாலீக்ஹாசன் (28). இவா், ராமேசுவரத்தில் உள்ள தனியாா் விடுதியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் பணியை முடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு ராமநாதபுரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

பாம்பன் பேருந்து பாலம் அருகே சென்ற போது, கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து, ராமேசுவரம் வந்த சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மாலிக்ஹாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாம்பன் போலீஸாா் வேன் ஓட்டுநா் ரிஷத் நாயக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT