கடல் சீற்றம் காரணமாக, ராமேசுவரம் மீன்பிடி படகுதளத்தில் நிறுத்தப்பட்ட விசைப் படகுகள். 
ராமநாதபுரம்

சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால், கடலுக்குள் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

DIN

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால், கடலுக்குள் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து சூறைக் காற்று வீசி வருகிறது. சனிக்கிழமை 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத் துறை அறிவுறுத்தியது.

இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி படகுதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT