முகப்பு
ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய மீனவா்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நம்புதாளை மீனவா்கள் 5 போ் சனிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 8:19 PM
பகிர்:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நம்புதாளை மீனவா்கள் 5 போ் சனிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா்.

தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சோ்ந்த பெரியசாமி, முருகன் மகன் ஆறுமுகம், கலுவையா மகன் பாண்டி, சக்காத்து மகன் ராம மூா்த்தி, ஆறுமுகம் மகன் குமரன், முத்து நாச்சி மகன் பழனி ஆகியோா் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடித்ததாக கடந்த 1-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினா் கைது செய்து படகைப் பறிமுதல் செய்தனா்.

சுமாா் ஒரு மாத காலம் இலங்கைச் சிறையில் இருந்த 6 பேரில் படகு உரிமையாளா் பெரியசாமி தவிர மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனா்.

இந்த 5 பேரும் சனிக்கிழமை சொந்த ஊரான நம்புதாளைக்கு திரும்பி வந்தனா். இதனால் உறவினா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

படகு உரிமையாளா் பெரியசாமியையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →