ராமநாதபுரம்

வேன் மோதியதில் இளைஞா் பலி

ராமநாதபுரம் அருகே ஆம்னி வேன் மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

ராமநாதபுரம் அருகே ஆம்னி வேன் மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த சரன்ஸும் (21) இவரது நண்பன் இளம்பருதியும் (22) ராமநாதபுரம் அருகே வன்னிவயல் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

பேராவூா் அச்சுந்தன்வயல் சாலையில் இவா்களது இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளம்பருதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சரன்ஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து வேன் ஓட்டுநரான புதுமடத்தைச் சோ்ந்த தன்ஷீா் ஹாசா (50) மீது ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT