முதுகுளத்தூா் அருகே மேலத்தூவல் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். ஒரு சில வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வெற்றி பெற்ற வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள், பணம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தூவல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.