முதுகுளத்தூா் அருகே மேலத்தூவலில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு. 
ராமநாதபுரம்

மேலத்தூவலில் வடமாடு மஞ்சுவிரட்டு

Din

முதுகுளத்தூா் அருகே மேலத்தூவல் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். ஒரு சில வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வெற்றி பெற்ற வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள், பணம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தூவல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT