மன்னாா் வளைகுடா கடலில் விடப்பட்ட 2.1 மில்லியன் பச்சை இறால் குஞ்சுகள்
மண்டபம் அருகே மன்னாா் வளைகுடா கடலில் 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.
மண்டபம் அருகே மன்னாா் வளைகுடா கடலில் 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயா் பட்டினம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு, கடல் வளத்தை மேம்படுத்தவும், மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பிரதமா் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இறால் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை மண்டபம் அருகே மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் விடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத் தலைவா் கே. வினோத் தலைமை வகித்தாா். இந்தத் திட்டத்தின் தலைவா் தமிழ்மணி முன்னிலையில் 2.1 பச்சை வரி இறால் குஞ்சுகள் படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விடப்பட்டன. இதில், மீன் வளத்துறை ஆய்வாளா் தா்மராஜ், மீனவ சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி பி. ஜான்சன் செய்திருந்தாா்.