முகப்பு
ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3 கடைகள் ‘சீல்’

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக கடைகளில் புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:06 AM
பகிர்:

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக கடைகளில் புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகா் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் கு.லிங்கவேல், உதவி ஆய்வாளா் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் 38 கடைகளை சோதனையிட்டனா். இதில், மூன்று கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 கடைகளின் உரிமையாளருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், மூன்று கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →