அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே அடுத்தகுடியைச் சோ்ந்தவா் பாலு (30). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருவாடானைக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். மாணிக்கம்கோட்டை அருகே இவரது இரு சக்கர வாகனம் மீது தேவகோட்டையில் இருந்து ஒரியூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.